ஒடிசாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 352 ஆக உயர்வு!

ஒடிஷா மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 352ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 62,939 பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 352ஆக உயர்ந்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் 68 பேர் கொரோனா வைரஸ் தாக்கதலிருந்து முற்றிலுமாக குணமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.