Corona update : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 5 மாவட்டங்கள் ?

 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 5 மாவட்டங்கள்.

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வருகிறது. இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டுமே 1755 பேருக்கு கொரோன பாதிக்கப்பட்ட நிலையில் 22 பேர் உயரிழந்துள்ளனர். இதில் 866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 495 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 141 பேருக்கும், திருப்பூரில் 110 பேருக்கும், திண்டுக்கலில் 80 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும் கொரோனா உறுதி செய்யபட்டடுள்ளது.  இதனால் தமிழக அரசு சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் என ஐந்து மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
Vidhusan