மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணுக்கு கொரோனா பரிசோதனை..!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கொரோனா பரிசோதனை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் கூறுகையில், சாதாரணக் காய்ச்சல்  தான் என்றும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறினார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணுவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் தான் நல்லகண்ணுவிற்கு கொரோனாவா..? அல்லது சாதாரண காய்ச்சலா..? என்பது தெரியவரும்.

author avatar
Castro Murugan