டெல்லி முதல்வருக்கு கொரோனா பரிசோதனை?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால், நாளை அவருக்கு கொரோன பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,282 பேருக்கு கொரோன தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28,936 ஆக உயர்வு.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று முதல் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா அறிகுறிகள் இருப்பதால், நாளை அவருக்கு கொரோன பரிசோதனை நடத்தப்படவுள்ளது.