கொரோனா தடுப்பு பணி-பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு.

கொரோனா தடுப்பு பணியின் போது பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்கள், வருவாய், காவல், தூய்மை பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட நேர்ந்தால், அவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் .மேலும் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.