சார்ஸை மிஞ்சிய கொரோனா.! 811 பேர் உயிரிழப்பு.! 37,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.! தவிக்கும் சீனா.!

  • சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 811-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2002-2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை விட கொரோனா மிஞ்சியிருக்கிறது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல நகரங்ககளில் பரவியுள்ளது. இதன் தாக்குதல் சுமார் 20 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் புதியவகை வைரஸ், முதலில் வுஹான் நகரில் உயிரிழந்த 61 வயது முதியவரின் இறப்புக்கு காரணம் எனக் கடந்த ஜனவரி 10-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு காரணமாக அங்கிருந்த சந்தைப் பகுதியில், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று கருதப்பட்டதால், விலங்குகள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு சீனா தடை விதித்தது.

இந்நிலையில், இந்த வைரசால் சீனாவில் நாளுக்கு நாள் இறப்புகள் அதிரிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், நேற்று (சனிக்கிழமை) வரை உயிரிழப்பின் எண்ணிக்கை 811-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்த வைரசால் 37,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியிட்டது. இதில் 2,656 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 89 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பை முதலில் கண்டறிந்த மருத்துவரும் லீ இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், அரசு மீது சீன மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சீனா 12க்கும் மேற்பட்ட நகரங்களுக்குச் செல்லவும், அங்கிருக்கும் மக்கள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 811-ஆக உயர்ந்திருக்கும் நிலையில், கடந்த 2002-2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை விட கொரோனா மிஞ்சியிருக்கிறது. இந்த சார்ஸ் வைரஸ் பாதிப்பால் அப்போது உலக அளவில் 774 பேர் உயிரிழந்தனர் என குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

10 mins ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

16 mins ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

17 mins ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

29 mins ago

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

52 mins ago

‘ஐபில் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது’ ! போட்டிக்கு பின் ஜஸ்டின் லாங்கர் கூறியது என்ன ?

Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…

1 hour ago