மதுரைச் சேர்ந்த 14 வயது சிறுமி கொரோனாவுக்கு பலி.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 15 பேரும், அரசு மருத்துவமனையில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இரத்த சோகை உடன் மதுரைச் சேர்ந்த 14 வயது சிறுமி
30.06.2020 அன்று இரவு 10.35 மணிக்கு அரசு ராஜாஜியில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையில் கொரோனா சோதனை மாதிரி 28.06.2020 அன்று எடுக்கப்பட்டது. முடிவு
28.06.2020 அன்று வந்ததின் விளைவு உறுதியானது. பின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக 04.07.2020 காலை 11.10 மணிக்கு இறந்தார்.

மேலும் தமிழகத்தில் 37 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 489 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30-50 வயதில் இன்று 11 பேர் உயிரிழந்த நிலையில், சென்னையை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.