டெல்லியில் சிறை கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெல்லியில் உள்ள திகார் சிறையில் 66 கைதிகளுக்கும் 48 சிறைத்துறை ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனவைரஸ் மீண்டும் தீவிரமாக பரவத் தொடங்கிய நிலையில் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 24 கடந்த மணி நேரத்தில் மட்டும் 1,68,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  டெல்லியில் உள்ள திகார் சிறையில் 66 கைதிகளுக்கும் 48 சிறைத்துறை ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.