கொரோனா அதிகரிப்பு! முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்!

நாகலாந்தில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். 

உலக முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நாகலாந்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொது இடங்களில், முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100அபராதம் விதிக்கவும், கைகழுவ வசதி ஏற்படுத்தாத நிறுவனங்களுக்கு, ரூ.500 அபராதமும் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு தலைமை செயலாளர் ஜெ.ஆலம் விடுத்துள்ள அறிக்கையில், ‘பொது இடங்களில் முக கவசங்களை அணிவது, நிறுவனங்கள்  கை கழுவும் வசதி வழங்குவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது என்று நாகலாந்து பேரிடர் மேலாண்மை ஆணையம் விதிமுறைகளை விதித்துள்ளது. இதை செய்ய தவறியவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை சுற்றிலும் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment