மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா

புதுக்கோட்டை கீழராஜ விதியுள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அந்த வங்கிக்கிளை மூடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, கீழராஜ விதியுள்ள மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் பணியாற்றி வரும் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நகராட்சி ஆணையர் மற்றும் நகர்நல அலுவலகர் யாழினி, அவர் பணிபுரிந்த வங்கிக்கு விரைந்து மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வந்தனர். மேலும், அவரின் குடும்பத்திரனும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறது.