கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 4,531 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4,531 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 4 ஆயிரத்திற்கும் இன்று ஒரே நாளில் 4,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. மேலும், இன்று 10 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் 490 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், 34,314 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவிலிருந்து இன்று 2,737 பேர் குணமடைந்தனர். இதுவரை 87,345பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.