அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா.. கல்லூரி மூடல்..!

திருச்சி சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் திருச்சி சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள 250 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்க்ளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில் மாணவர்கள் 14 பேர் மற்றும் ஒரு பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதும் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிக்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லூரி மூடப்பட்டது.

author avatar
murugan