கொரோனா அச்சம்: பெய்ஜிங்கில் சில பகுதிகளில் மீண்டும் பொதுமுடக்கம்!

பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு சில பகுதிகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கபட்டு வருகின்றனர். மேலும், இந்த வைரஸின் தாக்கத்தை சீனா கட்டுப்படுத்தியுள்ளது. அதைதொடர்ந்து, நியூஸிலாந்தும் தற்பொழுது கொரோனா இல்லா நாடாக மாறியுள்ளது.

இந்நிலையில் சீனா, பெய்ஜிங்கில் உள்ள சின்ஃபடி இறைச்சி கடை தொடர்புடையவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சீனாவில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 6 பேர் உள்ளூர் மக்கள் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதன்காரணமாக பெய்ஜிங்கில் சில பகுதிகளில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.