#கொரோனா எதிரொலி: உயர்நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூட வேண்டாம்

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும்,
கொரோனா பாதுகாப்பு நடவெடிக்கையாக வழக்கறிஞருக்கு, வழக்காடிகளுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூடவேண்டாமென தலைமை நீதிபதி ஏ.பி.சாகி கடிதம்.