கொரோனா உயிரிழப்பு;ரூ.8.5 கோடி நிதி விடுவித்து – அரசாணை வெளியீடு

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள்,செவிலியர்கள் & மருத்துவப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் & மருத்துவப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் & மருத்துவப் பணியாளர்களின் 34 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க,ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.