தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு.. கொரோனவால் ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் கொரோனவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாய் 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்தது. இது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தமிழகத்தில் ஏழாவது முறையாக இரட்டை மடங்கை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.