மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,000-ஐ நெருங்கவுள்ளது!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,000-ஐ நெருங்கவுள்ளது.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,47,502 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மேலும் 298 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,854 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3.7 சதவீதமாக உள்ளது.

மேலும் 6,484 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,94,253 ஆக உயர்ந்துள்ள நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 55.9 சதவீதமாக உள்ளது.

அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,36,980 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.