#Breaking: சென்னையில் தொடர்ந்து 8ஆம் நாளாக 1000-ஐ கடந்த கொரோனா.. பீதியில் மக்கள்!

சென்னையில் தொடர்ந்து 8 ஆம் நாளாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000-ஐ கடந்ததை அடுத்து, மக்கள் பீதியில் உள்ளனர்.

சென்னையில் ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் 13,085 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 12,591 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும், அம்மாவட்டத்தில் 260 பேர் உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்து வருகிறது.