மகாராஷ்டிராவில் மேலும் 12,614 பெருக்கு கொரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிராவில் மேலும் 12,614 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,614 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,84,754 ஆக உயர்ந்தது.

அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 322 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,749 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 6,844 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,08,286 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,56,409 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.