கேரளாவில் இன்று மேலும் 62 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரள மாநிலத்தில் இன்று 62 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 1150 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் குறைய தொடங்கிய கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1088 லிருந்து 1150 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 62 பேரில் 33 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள், 23 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் என்றும் 7 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 565 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, கேரளாவில் 577 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் வீடு மற்றும் மருத்துவமனை கண்காணிப்பில் மொத்தம் 124167 பேர் இருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்