கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. இரண்டாவது நாளாக இன்று 6,477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இரண்டாவது நாளாக இன்று ஒரே நாளில் 6 ஆயரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று 6,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல், தினமும் 3 ஆயரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திம்புகிறார்கள். இன்று கொரோனாவிலிருந்து 3,481 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,11,331 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மேலும், இன்று ஒரே நாளில் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 635 பேர் ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 48,982பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.