டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற வியூக குழு கூட்டம் தொடங்கியது!

டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற வியூக குழு கூட்டம் தொடங்கியது.

டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற வியூக குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பொது சிவில் சட்டம் பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு நாளை மறுநாள் விவாதிக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் ஆலோனையில் ஈடுபட உள்ளது.

நாடாளுமன்ற மழைக் கால தொடரில் காங்கிரஸ் கட்சியின் வியூகம் குறித்து மூத்த தலைவர்கள் உள்ளிட்டோருடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம், சீனா ஊடுருவல்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து மழைக் கால கூட்டத் தொடரில் கேள்வி எழுப்புவது குறித்து நாடாளுமன்ற வியூக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்