கர்நாடகாவில் பாஜக எம்பி, பிரக்யா தாக்கூர் மீது புகார்! சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறு பேச்சு.!

சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக எம்பி, பிரக்யா தாக்கூர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மிகவும் இழிவான உரையாற்றியதற்காக தெஹ்சீன் பூனவல்லா, ஷிவமோகா எஸ்பி ஜி.கே. மிதுன் குமாரிடம் புகார் அளித்துள்ளார்.

கர்நாடகாவின் ஷிவமோகாவில் இந்து ஜாகரனா வேதிகேயின் மாநாட்டில் பங்குகொண்ட பிரக்யா சிங் தாக்கூர், விழாவில் பேசும்போது இந்துக்கள் தங்கள் பெண் குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும், வீட்டில் ஆயுதங்களை வைத்திருக்கவும் கேட்டுக் கொண்டார். ஆயுதம் இல்லை என்றால் காய்கறிகளை வெட்டும் கத்தியை கூர்மைப்படுத்துங்கள்.

இந்து ஆர்வலர்களைக் கொல்ல அவர்கள் கத்திகளைப் பயன்படுத்தியுள்ளனர், எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள நமது கத்திகளைக் கூர்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். பிரக்யா சிங்கின் பேச்சு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வெளிப்படையான பேச்சு என்று தெஹ்சீன் பூனவல்லா புகார் அளித்துள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment