பிளஸ் டூ தேர்வு நடத்துவது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக் கேட்பு அறிக்கையை இன்று மாலை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வரிடம் சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து, மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து முடிவு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
பிளஸ் டூ தேர்வு ரத்தான நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய குழு அமைக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையிலான குழுவில் உயர்கல்வித்துறை செயலாளர் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது தொடர்பாக ஆய்வு செய்து குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும். குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்படும்.
குழு சமர்ப்பிக்கும் மதிப்பின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுளள்து.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…