கொரோனா தடுப்பு நிதியாக நன்கொடை வழங்கிய பிரபல பாலிவுட் நடிகை.!

கொரோனா தடுப்பு நிதியாக   பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரயுடெலா நிதியுதவி வழங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள பிரபலங்கள் அடங்கும். இந்த நிலையில் தற்போது ஒரு பெரிய தொகையை கொரனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரயுடெலா நிதியுதவி வழங்கியுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விர்ச்யுல் டேன்ஸ் மாஸ்டர் கிளாஸ் நடத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்ததார். இங்கு நடனத்தை கற்று கொள்ள விரும்பும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கற்று தரப்படும் என்றும் கூறியிருந்தார். அதன்படி இவரது டேன்ஸ் மாஸ்டர் கிளாஸ் வீடியோ டிக்டாக்கில் வைரலானது மட்டுமில்லாமல் அந்த வீடியோ 18 மில்லியன் மக்களை சென்ற டைந்தது. அதன் விளைவாக அவருக்கு ரூ. 5 கோடி வரை பெற்றார். அந்த தொகையை கொரோனா தடுப்பு நிதியாக வழங்கி உதவியுள்ளார்.