அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அளித்த மனுவை அமர்ந்து கொண்டு வாங்க முயன்ற கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை கடிந்து கொண்ட பொள்ளாச்சி ஜெயராமன்.
கோவை ஆட்சியர் சமீரனிடம், மத்திய மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்ட பணிகளை ரத்து செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கூட்டாக மனு அளித்தனர்.
அப்போது ஆட்சியர் சமீரன் தனது இருக்கையில் அமர்ந்தவாறு மனுவை பெற முயன்றார். அப்போது முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தனது 25 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் உள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்கும் போது, இப்படி அமர்ந்தவாறு வாங்குவீர்களா? இது என்ன புது பழக்கமாக உள்ளது? என கூறியுள்ளார்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் சமீரான் எழுந்துநின்று மனுவை வாங்கினார். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை மிரட்டியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூலூர் காவல்நிலையத்தில் திமுக பிரமுகர் தளபதி புகார் அளித்துள்ளார். மேலும், கொரோனா விதிகளை மீறி அதிகமானோர் ஆட்சியர் அலுவலகத்தில் கூடியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…
Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட…
Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…
VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…
China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…