சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மானாமதுரை மாரி (28) என்பவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருபவர். இவருக்கு திவ்யா (22) என்ற பெண்ணுடன் திருமணமாகி கடந்த டிசம்பரில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நாட்களிலேயே ஒரு குழந்தை இறந்துவிட்டது. மற்றொரு குழந்தையுடன் வீடு திரும்பிய பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த பெண் குழந்தைக்கு மலம் தொப்புள் வழியே வெளியேறியதால் மறுபடியும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தனியார் மருத்துவமனையில் அந்த் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் பயனில்லாத நிலையில் மேலும் இரண்டு லட்ச ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர், தினசரி கூலி வேலை செய்யும் மாரி வேறு வழியின்றி குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். இந்தத் தகவல் சமூக வலைதளத்தில் காட்டுத்தீயாக பரவியது. இதைதையடுத்து இந்த செய்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கவனத்திற்குக் கொண்டு சென்ற நிலையில், குழந்தையை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ நாகராஜன், சமூக ஆர்வலர்கள் பாலசுப்ரமணியன், சங்கரசுப்ரமணியன் உள்ளிட்டோர் உதவியதன் பேரில் இன்று மதுரை தனியார் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு அந்தக் குழந்தையும் பெற்றோரும் அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பலரும் உதவியதன் மூலம் குழந்தைக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் மானாமதுரை அழகர்கோயில் தெருவைச் சேர்ந்த பிறந்த 10 நாள் ஆன குழந்தைக்கு முதுகில் ஏற்பட்ட கட்டியை அகற்ற முடியாமல் தவித்த பெற்றோர்க்கு மதுரை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து உதவிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தற்போது இந்தக் குழந்தைக்கும் உதவி உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…