பிளஸ் 1 தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கோவை முதலிடம்!

பிளஸ் 1 தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கோவை முதலிடம்.

இன்று காலை 9.30 மணிக்கு +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர்களில் 97.49 விழுக்காட்டினரும், மாணவர்களில் 94.38 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில், 98.10 % தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடத்திலும், 97.90 % தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 97.51 % தேர்ச்சி பெற்று கரூர் மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.