நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

MK Stalin: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் தேசிய ஒற்றுமை நியாய யாத்திரை மும்பையில் நாளை நிறைவடைகிறது. இதையடுத்து மும்பையில் I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

READ MORE – இபிஎஸ் vs ஓபிஎஸ் : இரட்டை இலை சின்னம் யாருக்கு.? இன்று தீர்ப்பு.!

ராகுல் தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்ரா மகாராஷ்டிராவில் நாளை (மார்ச் 17 ஆம் தேதி) முடிவடையும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார். இந்த இந்தியா பொதுக் கூட்டத்தை முடித்துக்கொண்டு நாளை இரவே சென்னை திரும்புகிறார்.

READ MORE – சுட்டெரிக்கும் வெயில்… தமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்.!

இந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சிவசேனா (யுபிடி) தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, என்சிபி (சரத்சந்திர பவார்) தலைவர் சரத் பவார் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

READ MORE – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ராகுல் காந்தியின் யாத்திரை இன்று பிற்பகல் மும்பை வந்தடைகிறது. மக்களவைத் தேர்தல் தேதி குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், மத்திய மும்பை தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பூங்காவில் பொதுக் கூட்டம் உள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment