11ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு.!

11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான முடிவுகள் அண்மையில் வெளியானது. இந்நிலையில், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை பிற்பகல் முடிவுகள் வெளியாக உள்ளது.

இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களின் விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்றும், மதிப்பெண்கள் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:

தமிழ்நாட்டில் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7.73 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, பொதுத்தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவிகளில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 3,91,968 மாணவர்கள், 3,14,444 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.