பாரில் கடும் மோதல்: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, 6பேர் படுகாயம்!!

அமெரிக்காவின், புளோரிடாவிலுள்ள ஒரு பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் படுகாயம் மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிளோரிடாவின், டௌன்டவுன் தம்பா என்ற இடத்திலுள்ள ஒரு பாரில் இரு குழுவினருக்கிடையில் நடந்த வாக்குவாதம் கடும் மோதலாக மாறியது. அவர்கள் பாரின் வெளியில் வரும்வரை சண்டையிட்டு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மோதலின் உச்சத்தில் அவர்களில் ஒருவர் திடீரென்று தன் துப்பாக்கியை எடுத்து தாறுமாறாக சுட்டார், அவர் சுட்டதில் 6 பேர்(4 ஆண்கள், 2 பெண்கள்) பலத்த காயமடைந்துள்ளனர் மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று போலீசார் அறிவித்தனர். மேலும், மோதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், மோதலுக்கான காரணம் குறித்தும் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் தெரிவித்தனர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment