ரோம் நகரில், கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு செல்போன் மூலம் பேய் ஓட்டுவது குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் பல்வேறு நகரங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் ரோம் நகருக்கு வந்திருந்தனர்.
அவர்களுக்கு, செல்போன் மூலம் எப்படி பேயை ஓட்டலாம், பேய் பிடித்ததாக கூறப்படுபவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து பல்வேறு விதங்களில் அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.