மூன்றாவது குழந்தை பெற்றால் அதிரடி ஆப்பர் வழங்கும் சீன நிறுவனம்…!

மூன்றாவது குழந்தையை பெற்றெடுப்பவர்களுக்கு 11.50 லட்சம் ரொக்கம் போனஸ் மற்றும் ஒரு வருடம் விடுமுறை வழங்கும் சீன நிறுவனம். 

சீனாவில் ஒரு குழந்தை கொள்கைக்கு 2016இல் அதிகாரபூர்வமாக  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது சீன அரசாங்கம் மக்களை அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுமாறு ஊக்குவிக்கிறது. சமீபத்தில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கும் ஊழியர்களுக்கு ஒரு சீன நிறுவனம் ஊக்கத் தொகை  வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது குழந்தையை பெற்றெடுப்பவர்களுக்கு 11.50 லட்சம் ரொக்கம் போனசாக வழங்கப்படும் என்றும், நிறுவனத்தை சேர்ந்த பெண் ஊழியர்களுக்கு ஒரு வருட விடுமுறையும், ஆண் ஊழியர்களுக்கு ஒன்பது மாத விடுமுறையும் வழங்குவதாக கூறப்படுகிறது. சீன மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு எதிர்கொள்ள தொடங்கிய நிலையில் முதியோர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய காலகட்டங்களில் சீனாவில் கருக்கலைப்புகளும் அதிகரித்தது. இதனை அடுத்து சீன அரசு ஒரு குழந்தை கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சீனா தனது ஒரு குழந்தை கொள்கையை ஜனவரி 1-ஆம் தேதி 2016 அன்று அதிகாரபூர்வமாக தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.