உத்தர பிரதேசத்தில் காருக்குள் 4 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென கார் கதவு லாக் ஆனதால், அதில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாத்தில் உள்ள முந்தா பாண்டே பகுதியில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் 5-7 வயதான 4 குழந்தைகள் காருக்குள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த கார் கதவு, திடீரென லாக் ஆனது. அப்பொழுது காருக்கு இருந்த குழந்தைகள் காரை திறக்க முயற்சி செய்தனர். ஆனால் கார் கதவு திறக்கவில்லை.
காருக்குள் சிக்கிய அந்த குழந்தைகள், சில நிமிடங்களில் மூச்சுத்திணறி மயங்கினர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், காருக்குள் இருந்த குழந்தைகளை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் இரண்டு குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற இரண்டு குழந்தைகளும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.