குழந்தைகள் கவனிப்பு விடுமுறை: ஆண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு.!

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அதன்படி,அரசு ஊழியர்களாக இருக்கும் ஒரு ஆண், அவரது மனைவி இறந்தவராகவோ, மனைவியை விட்டு பிரிந்தவராகவோ இருந்தால் அவருக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். அதிலும், அந்த குழந்தைக்கு தந்தை மட்டுமே இருப்பின் அவர்கள் குழந்தைகள் கவனிப்பு விடுமுறை (சைல்ட் கேர் லீவ்-சிசிஎல்) எடுக்கலாம்.

மேலும், குழந்தைகள் மாற்று திறனாளிகளாகவோ ,சிறப்பு குழந்தைகளாக இருந்தாலும் ஆண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, முன்கூட்டியே விடுப்பு எடுப்பவர்கள் தாங்கள் பணியாற்றும் துறையில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், முதல் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பை குழந்தையை கவனிக்க ஊழியர்களுக்கு வழங்கப்படும், இரண்டாம் ஆண்டில் 80% ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஊழியரின் குழந்தை மாற்று திறனாளி எனில் 22 ஆண்டுகள் வரை எப்போது வேண்டுமானாலும் விடுப்பு எடுக்க அனுமதி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.