கிருஷ்ணகிரி தொடர்ந்து இன்று சேலத்திற்கு முதல்வர் பயணம்.!

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய நேற்று முதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்று பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் தளர்வுடன் கூடியஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், நேற்று  கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்ற  தமிழக  முதலமைச்சர் பழனிசாமி ஓசூர் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர், சேலம் ,பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டியில் பகுதியில் அதிமான விபத்து அதிகமாக நடப்பதால் புதிய மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

பாலம் அமைக்க ரூ. 33 கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாலம் கட்டும் பணி முடிவடைந்ததால் நேற்று கந்தம்பட்டி  மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

இந்நிலையில், இன்று சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி  பயணம் மேற்கொள்கிறார். நாளை  ஈரோட்டிற்கும் முதலமைச்சர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan