முதல்வரின் சுற்றுப் பயணங்கள் ஒத்திவைப்பு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்களுடன் வருகின்ற 23-ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனால், 23-ம் தேதி முதலமைச்சர் கொரோனா பணிகளை ஆய்வு செய்ய இருந்த தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சுற்றுப் பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan