பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்.

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழ்நாட்டினருக்கான வாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டில் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்குவது மட்டுமே சிறந்த சேவை.

அனைத்து பகுதி மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குதல் மட்டுமே சிறந்த சேவையை உறுதி செய்ய முடியும். தமிழ்நாட்டில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும்.

நல்ல நிர்வாகத்திற்கு மக்களுடன் இணக்கமாக பழகுதல், உள்ளூர் மொழி தெரிந்திருத்தல் முக்கியம் என்றும் தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெறுவோருக்கு, 20% இடஒதுக்கீட்டின் கீழ் நேரடி நியமனங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment