சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்.!

சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

சர்வதேச உடல் உறுப்பு தானம் என்பது மற்றவர்களின் உயிரை காப்பாற்ற தாமாக முன்வந்து தனது உடல் உறுப்புகளின் ஒரு பகுதியை கொடுத்து உதவும் நற்செயலாகும். மண்ணில் மங்கி போகும் உடல் ஒருவருக்காவது உதவும் என்றால் உலகில் இதைவிட பெரிய நற்செயல் எதுவும் இருக்காது. அந்த வகையில் சர்வதேச உடல் உறுப்பு தான தினமான ஆகஸ்ட் 13ம் தேதி (நாளை) ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இதனையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல்உறுப்பு தானம் செய்வது குறித்து வலியுறுத்தி உள்ளார். அதாவது உடல் உறுப்பு தினத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.