மதுரை மாவட்டத்தில் மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,214 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 237 ஆக உள்ளது.
இந்நிலையில் கொரனோ நோய்த் தடுப்பு பணிகள் குறித்து முதலலவர் பழனிசாமி மதுரை வருகிற ஆக-6ம் தேதி வியாழக்கிழமை ஆய்வு செய்கிறார்.
மதுரை மாவட்டத்தில் படுக்கை வசதிகள் எல்லா அரசு மருத்துவமனைகளும் 1,937 படுக்கைகளும், தனியார் மருத்துவமனை 591 படுக்கைகளும் கோவிட் கேர் சென்டர்களில் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.