, ,

மழைக்கால மருத்துவ முகாமை ஆய்வு செய்த தமிழக முதல்வர்..!

By

கொளத்தூரில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, சென்னையில் அதிகமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். மேலும், சுகாதார சீர்கேடுகளால் ஏற்படும் உடநலக்குறைவை தடுக்கும் வண்ணம், இன்று சென்னையில் சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கொளத்தூரில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

Dinasuvadu Media @2023