மேற்கு வங்கத்தில் இறுதி ஆண்டு தேர்வுகளை அக்டோபர் 1 முதல் நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி திட்டம்.!

மேற்கு வங்கத்தில் இறுதி ஆண்டு தேர்வுகளை அக்டோபர் 1 முதல் 18  நடத்த மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

அக்டோபர் 1 முதல் 18 வரை இறுதி செமஸ்டர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துமாறு மேற்கு வங்க முதல்வர் இன்று அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அறிவுரையின் படி அக்டோபர் 1 முதல் 18 வரை இறுதி செமஸ்டர் தேர்வுகள் முடிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இதற்கிடையில், செப்டம்பர் 30 க்குள் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தாமல் மாநிலங்களும் பல்கலைக்கழகங்களும் மாணவர்களை ஊக்குவிக்க முடியாது என்று ஆகஸ்ட் 28 அன்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இருந்தாலும், செப்டம்பர் 30 க்குள் தேர்வுகளை நடத்த முடியாவிட்டால் யுஜிசியை அணுக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது என்பது .

 

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.