தஞ்சை மாவட்ட நீர்நிலை தூர்வாரும் பணி.! களத்தில் இறங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.!

டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார். 

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடிக்காக, வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி, காவிரி நீர் பாயும் வழித்தடங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 90 கோடி ரூபாய் செலவீட்டில், காவிரி கரையோரங்களில் சுமார் 1080 கிமீ தொலைவில் 12 மாவட்டங்களில் தூர்வாறும் பணியானது, கடந்த மாதம் (மே) 27இல் தொடங்கியது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு வருகிறார்.

தஞ்சை மாவட்டம் முதலைமுத்துவாரி பகுதி கால்வாயில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 20 கோடி ரூபாய் செலவில் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.