கோயில்கள் பராமரிப்புக்கு ரூ.3 கோடி நிதி உதவி – முதல்வர் மு,க.ஸ்டாலின்

88 கோயில்களின் மேம்பாட்டு பணிகளுக்காக 3 கோடி ரூபாய் நிதியுதவியை காசோலையாக கோயில் நிர்வாக குழுவினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்து உள்ளார்.

தமிழக அரசு  தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் தான் ஊரக கோவில்களின் மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அறநிலையத்துறை அதற்கான நிதியுதவிகளை அந்தந்த கோயில் நிர்வாக அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது,  தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கோயில்களின் மேம்பாட்டு பணிகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் 88 கோயில்கள் உள்ளன.

இந்த 88 கோயில்களின் மேம்பாட்டு நிதிக்காக, 3 கோடி ரூபாய் நிதியுதவியை காசோலையாக கோயில் நிர்வாக குழுவினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்து உள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment