ஜார்க்கண்ட் ஆளுநராகும் சி.பி.ராதாகிருஷ்ண க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

13 மாநிலங்களுக்கான ஆளுநர்கள் நியமனம் மற்றும் மாற்றம் செய்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.இதில் தமிழகத்தை சார்ந்த பாஜகவின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ண க்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டீவீட்டில்,ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment