சாலைகளில் முதல்வர் மற்றும் விஐபிக்களின் பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் பெண் காவலர்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அதனை எடுத்து டிஜிபி திரிபாதி அவர்கள் பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிக்கு நிறுத்தக் கூடாது என உயர் அதிகாரிகளுக்கு அறிவிப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள முன்னாள் காவலர் கவி செல்வராணி அவர்கள் சாலைகளில் பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்துள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெண் காவலர்களுக்கு ஆண் தாயாக முதல்வர் முக ஸ்டாலின் விளங்குவதாகவும், இதனால் முதல்வர் முக ஸ்டாலின் மீது ஒவ்வொரு பெண் காவலர்களுக்கும் தாய் அன்பும், மதிப்பும், மரியாதையும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என தெரிவித்துள்ளார். மேலும் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் உயிருடன் இருந்திருந்தால், முதல்வர் முக ஸ்டாலின் சவால்களை சந்திக்கும் சாமர்த்தியத்தை கண்டு வியந்து போய் இருப்பார்கள் எனவும் பாராட்டியுள்ளார்.
மேலும் இது குறித்து பேசியுள்ள அவர், பெண் காவலர்களுக்கு சாலையோர பாதுகாப்பு பணிகளில் இருந்து முதல்வர் விலக்கு அளித்துள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பல பெண் காவலர்கள் தங்களின் வலியை வெளியில் சொல்ல முடியாத அளவு சூழ்நிலை இருப்பதாகவும், ஆனால் முதல்வர் அனைத்தையும் புரிந்து கொண்டு தான் தற்பொழுது பெண் காவலர்களுக்கு சாலை பாதுகாப்பு பணியில் இருந்து விலக்கு அளித்துள்ளார், அதற்காக முதல்வருக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…