#Breaking:பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில், பெண் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளதற்கு 10 லட்சம் நிதி வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே இன்று பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில், அரக்கோணத்தை சேர்ந்த பெண் காவலர் கவிதா உயிரிழந்துள்ளார். … Read more

சமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் வீடியோ வெளியிட்ட பெண் காவலர் சஸ்பெண்ட்…!

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் துப்பாக்கியுடன் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  பெரும்பாலும் தற்பொழுது அரசு பணிகளில் இருக்கக்கூடிய ஊழியர்கள் முதல் சாதாரண கூலித் தொழில் செய்யக்கூடிய நபர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அரசு பணிகளை செய்யக்கூடிய ஊழியர்கள் சில சமயங்களில் இதனால் சிக்கலில் மாட்டி விடுகின்றனர். தற்பொழுதும் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பெண் போலீஸ்  … Read more

பெண் காவலர்களுக்கு ஆண் தாயாக முதல்வர் விளங்குகிறார் – முன்னாள் பெண் காவலர் செல்வராணி!

சாலை பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பெண் காவலர்களுக்கு ஆண் தாயாக முதல்வர் விளங்குவதாக முன்னாள் காவலர் கவி செல்வரணி அவர்கள் தெரிவித்துள்ளார். சாலைகளில் முதல்வர் மற்றும் விஐபிக்களின் பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் பெண் காவலர்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக  என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அதனை எடுத்து டிஜிபி திரிபாதி அவர்கள் பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிக்கு நிறுத்தக் கூடாது என உயர் … Read more

தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபடியே மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் காவலர்!

சென்னையில் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தபடியே மயங்கி விழுந்த பெண் காவலர். சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை கருமாரியம்மன் கோவில் இரண்டாவது தெரு நடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தான் ஆயுதப்படை காவலர் சத்தியலட்சுமி. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்து இரண்டாம் நிலை காவலராக பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் என்.எஸ்.ஜி கமாண்டோ பயிற்சி மையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார், இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. … Read more

காதலித்த பெண் காவலரை திருமணம் செய்ய மறுத்த காவலர்..! தாலி கட்ட வைத்த பெண் காவலர்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அடுத்து பாண்டுரங்கன் தொட்டியை சார்ந்தவர் கண்ணன்.இவர் மோப்பநாய் பிரிவில் வேலை செய்து வருகிறார்.இவரது உறவினர் பெண் நதியா.இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை காவலராக வேலை செய்து வருகிறார். நதியா ,கண்ணன் இருவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர்.இந்நிலையில் நதியவை கண்ணன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் தான் ஏமாந்து விட்டதாக கூறி நதியா விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்து உள்ளார். நதியாவை  மீட்ட அவரது உறவினர்கள் … Read more