சட்டீஸ்கரில் கண்ணி வெடி குண்டு வெடித்து சிஆர்பிஎப் வீரர் ஒருவர் பலி !

சட்டீஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்திலுள்ள நக்சல்களை தேடும் பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் கடந்த 30- ஆம் தேதி நள்ளிரவு முதல் பாஸ்டர் தண்டேவடா மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் காலை சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போட்லி கிராமம் அருகே  ரோந்து பணியில் ஈடுபட்டு  இருந்தார்கள். அப்போது ரவுஷன் குமார் என்ற  சிஆர்பிஎப் வீரர்  நக்சல் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியை மிதித்து விட்டார்.

இதனால் கண்ணி வெடி  குண்டு வெடித்ததில்  ரவுஷன் குமார்  சம்பவ இடத்திலே பரிதாபமாக  இறந்தார்.

author avatar
murugan