மக்கள் செல்வனுக்கு காத்திருந்து கடைசில பிரபல நடிகையை ஒப்பந்தம் செய்த சேரன்.!

சேரன் அடுத்ததாக சிறிய பட்ஜெட்டில் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ஒரு படத்தினை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் குடும்ப ரசிகர்களின் மனதை தனது அழகான படைப்பின் மூலம் கவர்ந்தவர் இயக்குனரும், நடிகருமான சேரன் .இவர் ஆட்டோகிராப் உள்ளிட்ட பல படங்களை இயக்கி நடித்துள்ளார் .குடும்ப உறவுகளின் மதிப்பை தனது படங்களின் மூலம் எடுத்துரைக்கும் இவர் பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதனை தொடர்ந்து திருமணம்,ராஜாவுக்கு செக் உள்ளிட்ட படங்களில் நடித்தார் .

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதியிடம் சேரன் கதை ஒன்றை கூறியதாகவும் ,அது பிடித்து போன விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டது.ஆனால் விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்து பிஸியாக இருந்ததால் சேரனின் படம் தாமதம் ஆனதாக கூறப்பட்டது.அவரை காத்திருந்த சேரனிடம் விஜய் சேதுபதி பிரபல நடிகையின் பெயரை பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது சேரன் இயக்கும் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சிறிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தினை ஐஸ்வர்யா ராஜேஷிடம் கூறி அவரை விஜய் சேதுபதி தான் ஒப்பு கொள்ள வைத்ததாக கூறப்படுகிறது .இது உண்மையெனில் விரைவில் சேரன் இயக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.