இன்று சென்னை அணி பஞ்சாப் அணியுடன் மோதல் !ஐ.பி.எல்-லில் 100-வது வெற்றியை ருசிக்குமா சென்னை அணி

இன்று நடைபெறும்  55-வது ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி  பஞ்சாப்பில்  உள்ள பிந்த்ரா  மைதானத்தில் நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ஏற்கனவே ஃபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 9 வெற்றி,4 தோல்விகள் ஆகும்.9 வெற்றிகள் பெற்றதன் மூலம் 18 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

ஆனால்  கிங்ஸ் லெவன் பஞ்சாப அணியை பொருத்தவரை அந்த பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்து விட்டது.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 13 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 5 வெற்றி,8 தோல்விகள் ஆகும்.5 வெற்றிகள் பெற்றதன் மூலம் 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

 

சென்னை அணியை பொறுத்தவரை ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால்  ஐ.பி.எல்-லில் 100-வது வெற்றியாக அமையும்.

 

Leave a Comment